இந்த blog-ல் என்னுடன் இனைந்து அன்னியன் மாதிரி அடிக்கடி எனக்குள்ளே இருந்து வெளிய வந்து இம்சைகளைக் கூட்டும் சில multiple personality character-களும் கிறுக்கப்போகிறார்கள். கிறுக்கப்போகும் அந்த character-களை பற்றிய ஒரு குட்டி INTRO:

முதல்ல வளைச்சு வளைச்சு check வைக்கப் போகும் checkmate செல்லத்துரை. next-ட்டு நாடு உருப்பட சில பல சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்யப்போகும் சட்டதுரை. future-ல் இன்னும் சில புது charachter-களும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்......

Thursday, October 21, 2010

CENTRAL-லுக்கு SALUTE..!! STATE-க்கு CHECK...!!

(100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்)


நடுவண் அரசு செய்த ஒரு சில நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. பலருடைய பசியைப் போக்கிய திட்டம். அதற்காக Central-க்கு ஒரு Military Salute.


ஆனால்,...இந்தத் திட்டத்தை மாநிலங்கள் எவ்வாறு திறமையாக கையாளுகின்றன என்பதில் தான் இந்தத் திட்டத்தின் முழு வெற்றி அடங்கியிருக்கிறது.

தமிழகத்தில்,

சும்மா இருந்து விட்டு சம்பளம் வங்கிச் செல்கிறார்கள், குழி தோண்டுவது அதை மூடுவது மீண்டும் தோண்டுவது என்று வேலை அற்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாய வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கூட சும்மா இருப்பதற்கு சம்பளம் கிடைக்கிறதே என்று இங்கு வரத் துவங்கிவிட்டனர். கடைசியில் ஆட்கள் கிடைக்காமல் தவிப்பது விவசாயிகள். விவசாய நாடு என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது, உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும். ஏற்கனவே இருக்கிற விவசாய நிலங்களையெல்லாம் flat போட்டு அழித்துக் கொண்டிருக்கிறார்கள், இதில் இது வேறு....

ஆனால் கேரள மாநிலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா...?

கிடைக்கும் மனித உழைப்பை வைத்து வெட்டி வேலை செய்து வீணாக்காமல், விவசாயிகளுடன் கை கோர்த்து வேலை இல்லாதவர்களுக்கு 100 நாள் வேலையையும் உறுதி செய்து அரசுப் பணத்தையும் மிச்சம் செய்து வருகிறார்கள். இது புத்திசாலித்தனம்.

இதே யோசனையை நம் மாண்புமிகு முதல்வரிடம் எடுத்து கூறியிருந்தால் அவரும் கூட தான் அமல்படுத்தி இருப்பார் என்கிற உங்கள் mind voice கேட்கிறது.

அமைச்சரவை கூட்டத்தில் இதை எடுத்துச் சொன்னார் அமைச்சர் திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், அவருக்கு நம்ம Doctor அளித்த பதில் (பதில்-னு சொல்றத விட bulb-னு சொன்ன correct-அ set ஆகும்) என்ன தெரியுமா....?

"இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீயே ஆண்டுடிருப்ப, காலத்துக்கும் உன் கிட்ட கொத்தடிமயா இருக்கனும்னு நினைக்கிறயா....."


நமது மாண்புமிகு Dr.முதல்வர் இன்னும் எந்த நுற்றாண்டில் இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை, Doctor Sir இது 2010.....

அவர் சொன்னது போலவும் ஒரு காலத்தில் இருந்தது, பெரும் ஜமீன்தார்களிடம் பலர் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள், இன்னிக்கு நிலைமை அப்படியா இருக்கு எதுக்கெடுத்தாலும் strike-னு குதிச்சிறாங்க. அதுவும் இல்லாம, இப்ப 20 ஏக்கர் 30 ஏக்கர்-னு நிலம் வசிருக்கிரவங்க எல்லாம் ஆள் வச்சா கட்டுபடி ஆகாதுனு modern agriculture-க்கு மாறிடாங்க. உழவுக்கு tractor-ல ஆரம்பிச்சு களை பறிக்க tiller தண்ணி பாய்ச்ச சொட்டு நீர் பாசனம்னு எல்லா வேலையும் machine தான் செய்து. அதனால அவங்களுக்கு எந்த ஆள் பற்றாகுறையும் இல்லை.

ஆள் கிடைக்காம, விவசாயம் செய்ய முடியாம அவதிப்படுறது 1 ஏக்கர் 2 ஏக்கர்னு வச்சிருக்கிற குறு விவசாயிகள் தான். குறு விவசாயிகள் கிட்ட சம்பளத்துக்கு வேலை செஞ்சா அது கொத்தடிமைத்தனமா., அப்படி நம்ம Doctor சொல்லறபடி பாத்தா software engineers, government officers-னு அத்தனை பேரும் கொத்தடிமைகள் தான். அங்க எல்லாம் வேலை செய்யளாம் விவசாயம் பண்ணக் கூடாதா...?


CHECKMATE


நிலைமை இப்படி இருக்க, இது போன்ற நல்ல யோசனையை நமது மாண்புமிகு மரியாதைக்குறிய டாக்டர் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏற்க மறுப்பது ஏன்.....?



ஒரு சாதாரண அமைச்சர் சொல்லி நான் கேட்பதா என்ற  தலைக் கணமா....?

இல்லை

நான் ஏழைகளின் பங்காளன் என்று காட்டிக் கொள்ளப் போடும் கபட நாடகமா...?

இல்லை

விவசாயத்தின் மீது அக்கறையின்மையா...?

இல்லை

ஜாதி வெறியா...?



-checkmate செல்லத்துரை
check- க்குகள் தொடரும்.....