இந்த blog-ல் என்னுடன் இனைந்து அன்னியன் மாதிரி அடிக்கடி எனக்குள்ளே இருந்து வெளிய வந்து இம்சைகளைக் கூட்டும் சில multiple personality character-களும் கிறுக்கப்போகிறார்கள். கிறுக்கப்போகும் அந்த character-களை பற்றிய ஒரு குட்டி INTRO:

முதல்ல வளைச்சு வளைச்சு check வைக்கப் போகும் checkmate செல்லத்துரை. next-ட்டு நாடு உருப்பட சில பல சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்யப்போகும் சட்டதுரை. future-ல் இன்னும் சில புது charachter-களும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்......

Friday, July 23, 2010

கலைஞர் காப்பீட்டுத்திட்டம்
(அரசின் கையாளாகாத்தனமா...??? ஊழலா...???)


நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்காக அரசே premium செலுத்தும் ஒரு லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு

காப்பீடு வழங்கும் நிறுவனம் - star health insurance company

இந்தக் காப்பீடுத்திட்டத்தின் மூலம் சில நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும், பல மருத்துவமனைகளில் எற்றுக்கோள்ளப் படுவதில்லை, குறைந்த செலவு ஆகும் சிகிச்சைகளுக்கு அதிக கட்டணம் காட்டி மருத்துவமனைகள் லாபம் ஈட்டுகின்றன, மொத்த காப்பீடுக்கும் குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்று பல குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டி உள்ள போதிலும் அதையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வேறு கோணத்தில் இந்தக் காப்பீடுத்திட்டத்தினை பார்ப்போம்.

கேள்விகள்-(பதில்களை நான் சொல்வதைவிட நீங்களே சிந்திக்கவும்)

1. கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் அவசியம் என்ன...?

2. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுவது ஏன்...?

3. கோடிகளை காப்பீட்டில் கொட்டுவதற்கு பதிலாய் அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த செலவு செய்திருந்தால் ஏழை மக்கள் அனைவருமே photo-களும் அடையாள அட்டைகளும் இல்லாமலேயே இலவசமாக பயன் அடைந்திருப்பார்களே...?

4. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளின் இழிவு நிலையை ஒப்புக்கொண்டு, மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதை அரசே மான்யம் கொடுத்து ஊக்குவிக்கிறதா...?


CHECKMATE


அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு வக்கில்லை, திறமையில்லை
ஆள விடுங்க சாமி என்று தங்கள் கையாளாகாத்தனத்தை கலைஞர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு ஒப்புக்கொள்ளப் போகிறாரா.....????????

அல்லது

எங்களுக்குத் திறனும் உண்டு, வக்கும் உண்டு... ஆனால், insurance company மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் amount வாங்கிக் கொண்டு மக்கள்(தன் மக்கள் அல்ல தமிழக மக்கள், பொதுமக்கள்) பணத்திலேயே மக்கள் மூஞ்சியில் கரியை
பூசினேன் என்று கூறி ஊழல் குற்றத்தை
ஏற்கப் போகிறாரா.....????????


இரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் சட்டப்படி உடனே பதவி விலகியாக வேண்டும்.



-checkmate செல்லத்துரை
check- க்குகள் தொடரும்.....


.